பட்டாசு இருக்கிற தீபாவளி
புது துணி இருக்கிற தீபாவளி
பலகாரம் இருக்கிற தீபாவளி

பட்டாசு இல்லாத தீபாவளி
புது துணி இல்லாத தீபாவளி
பலகாரம் இல்லாத தீபாவளி

மேலே சொன்ன விதமாகவோ, கலந்தோ இருந்தாலும்

"மகிழ்ச்சி" என்ற ஆயிரம் வாலா சரவெடியை கொண்டு
நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் போட்டு தாக்குங்க :)

மீண்டும் அழுத்தம் திருத்தமா சொல்லிக்கிறேன் "மகிழ்ச்சி"

இனிய ஏகாந்தமான சந்தோஷமான தீபாவளி வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

எனது துறை தலைவருடன் (ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் "BOSS" ஹி... ஹி...)

வணக்கம்... வந்தனம்... அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நெருங்கும் சமயம்....அப்புறம்.... தேர்வு எழுத ஆயத்தமாகி வரும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.... பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் கோல்ட் மெடல் நான் பெற்று இருப்பது அனைவர்க்கும் தெரியும் என நினைக்கிறேன்....(இந்த நேரத்தில் இது ரொம்ப முக்கியமோ???)...ம்ம்ம்ம்...

அப்புறம் முக்கியமான விஷயம்... நமக்கு அட்வைஸ் பண்றவங்களையும் பிடிக்காது.... அட்வைஸ் பண்றதும் பிடிக்காது.... ஆனா அக்கறை-யா சொல்றது பிடிக்கும்....அக்கறை-யா சொல்றவங்க பேச்சை கேக்கவும் பிடிக்கும்...ஹி ஹி... (ஐயோ, டேய் உன் மொக்கையை இங்கேயும் ஆரம்பிச்சாச்சா???? கொடுமை...)

முதலில் பெற்றவர்களுக்கு தான் நெறைய சொல்லணும்....பெற்றவர்கள் தயவு செஞ்சு எந்த நேரமும் படி படி என சொல்லாதீங்க.... பிள்ளைகளுக்கே தெரியும்.......ஆனால் அவர்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது மட்டும் தான் நம்மோட முக்கிய பணியாக இருக்க வேண்டும்...

அப்புறம் படிக்கும் நேரம்... ஒவ்வொருத்தருக்கும் இது வேறுபடும்.... சிலருக்கு அதி காலை நேரத்தில் படிச்சா தான் நல்லா வெகு சீக்கிரமாக படிப்பாங்க... சிலருக்கு இரவு நேரம்.... பிள்ளைகளுக்கு எந்த நேரம் வசதியோ.... அந்த நேரங்களில் காப்பி டீ என போட்டு கொடுத்து ஊக்கம் கொடுங்கள்... (எனக்கு இன்னும் நினைவில் இருக்கு... அதிகாலை மூன்று மணிக்கு என்னோட அப்பா காபி போட்டு கொடுப்பாங்க... வந்து கொடுத்து விட்டு, வேற எதுவும் வேண்டுமாப்பா-னு கேப்பாங்க...... ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து.... தண்ணி வேண்டுமா???.... எதுவும் வேண்டுமா-னு கேப்பாங்க...அப்போ எல்லாம் நான் கண் கலங்கி இருக்கேன்... படி படி-னு சொல்லிகிட்டே இருக்க மாட்டாங்க...நல்ல அப்பா...பிள்ளைங்களை புரிஞ்சுக்காத பெத்தவங்க பெத்தவங்களே இல்லை... வைஸ் வெர்சா...)

சரி...... அப்புறம் படிக்குற விஷயம்.... ஸ்கூல் தொடங்கி முதல் நாளில் இருந்து நீங்கள் படிக்க தொடங்கி இருந்தால் உங்களுக்கு பாடங்களை திருப்பி திருப்பி படிப்பது தான் சரியாக இருக்கும்..... அப்படி முதலில் இருந்து படிக்காதவர்கள்.... இனி வரும் நாட்களில் முக்கியமான பாடங்களை முதலில் படித்து விட்டு மற்றவற்றை ஆரம்பியுங்கள்.....

எப்படி மனனம் செய்வது, சொல்லி பார்ப்பது, எப்படி படிப்பது இவற்றை பற்றி நான் சொல்ல போவது இல்லை.... உங்களுக்கே தெரியும் உங்கள் திறன்.... சோ உங்கள் வசதிப்படி நீங்களே முடிவு செய்து படிக்க ஆரம்பியுங்கள்....

எல்லாம் படித்து பார்த்த பின்பு.... சிறிது நேரம் மட்டும் குழு விவாதம் செய்யலாம்... (எனக்கு இந்த குழு விவாதத்தில் இஷ்டம் இல்லை... உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் பண்ணி கொள்ளலாம்... ஆனா ஒரேயடியாக விவாதம் பண்ண கூடாது.... அப்புறம் தெரிஞ்சதும் மறந்து போகும்.....)

அப்புறம் தேர்வுக்கு கால் மணி நேரம் முன்பு அறைக்குள் போய் உக்கார வேண்டும் என்று நெறைய பேரு சொல்லுவாங்க.... மன அழுத்தத்தை குறைக்க என்று.... இதுவும் உங்கள் இஷ்டம் தான்... (நான் கடைசி நொடி வரை படிக்கும் ஆள்... பர பரப்பு ஆசாமி வேறு.... ஆனால் எனக்கு நியாபக மறதி அதிகம்...அதனால் அப்படி...சிலர் சொல்லலாம்.... கடைசி பத்து நிமிடங்களில் என்ன படிக்க போகிறாய்???.... என்று... ஆனால் அது எனக்கு அது தான் வசதி....அதனால் நான் அடைந்த பலன்கள் நெறைய...) எது எப்படியோ... உங்களுக்கு எது வசதியோ அப்படி பண்ணுங்கள்....

ஆனால் கேள்வித்தாள் வாங்கிய உடனே எழுத தொடங்காதீர்கள்.... அஞ்சு நிமிஷம் பொறுமையாக எல்லா கேள்விகளையும் படிச்சு பாருங்க... அப்புறம்... நேரம் ஒதுக்கி...எழுத ஆரம்பிங்க... கடைசி இருபது நிமிஷம் எழுதியதை சரி பார்க்க ஒதுக்கி கொள்ளுங்கள்.... (இது போக இன்னும் நெறைய விஷயங்கள் உங்களுக்கே தெரியும்... இருந்தாலும் சொல்கிறேன்....)

சாப்பிடாம எக்ஸாம் போகாதீங்க....... உங்க அப்பா அம்மா படி படி-னு சொன்னா.... எரிச்சல் படாம, நல்ல மார்க்ஸ் வாங்குவேன்... நீங்க கவலைப்பட வேண்டாம்-னு சொல்லுங்க.... நீங்க சொன்னா கண்டிப்பா அவங்க புரிஞ்சுக்குவாங்க....

உங்களுக்கே தெரியும்.... நீங்க எத்தனை மார்க்ஸ் வாங்க போறீங்க-னு????... இருந்தாலும்... நீங்க நினைச்சதை விட நெறைய வாங்க, கொஞ்சம் சிரத்தை எடுத்து படிச்சா... நீங்களும் ஒரு கலக்கல் ஆளு தான்....

கடைசியாக ஒரு விஷயம்.... உங்களால் எவ்வளவு எவ்வளவு எவ்வளவு முடியுமோ, அந்த அளவு நல்லா படிங்க.....உங்களுக்காக, உங்கள் பெற்றோருக்காக படியுங்கள்... உங்கள் மதிப்பெண்களை வைத்து தான் பெற்றோரும், மற்றவர்களும் உங்களை எடை போட போகிறார்கள் என எதிர்மறையாக நினைக்காமல், உங்கள் மதிப்பெண்கள் தான் உங்கள் பெற்றோருக்கு பெருமையும் உங்களுக்கு உரிய முகவரியையும் கொடுக்க போகிறது என நினைத்து தேர்வு எழுதுங்கள்....

எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் நம் பக்கம் இருக்க... கவலை எதற்க்கு????

மீண்டும் பார்க்கலாம்...

உங்கள் அருண் பிரசங்கி

நான் கடவுள்

(இது திரை விமர்சனம் அல்ல... திரை பார்வையும் அல்ல... ஒரு சிறு அனுபவம்)

போன வியாழக்கிழமை மதிய நேரம், நான் கடவுள் - படம் பார்க்கிறதுக்கு நானும், அருண் அண்ணனும் (நம்ம சீனியர் தாங்க...) போனோம்... கவுன்டர் மூடி இருந்தது...ஆரம்பமே இப்படியா-னு??? சொல்லிக்கிட்டோம்... இருந்தாலும் பார்க்க வந்து இருப்பது பாலா படம்..... இதுல சின்ன விஷயத்துக்கு எல்லாம் சென்டிமென்ட் பாக்க கூடாது-னு, ஒரு வழியா நைட் ஷோ-க்கு போய் விட்டோம்....(ஒரேடியா என்னோட சொந்த கதையை சொல்றேன் என்று கோவிச்சுக்காதீங்க....)

படத்தை எல்லாரும் பார்த்து இருப்பீங்க-னு நம்புறேன்.... எல்லாருடைய வாக்குப்படி, அடித்தட்டு மக்களின் நிலையை முதன் முறையாக தொட்டு இருக்கும் தமிழ் படம்....

காசி, ஆர்யா, அகோரி, சமஸ்க்கிருத உச்சாடனங்கள், பெற்ற தகப்பனின் அறியாமை, தங்கை, அம்மா-வின் பாசம், கோவில் வாசலில் பிச்சை எடுக்க பயிற்சி கொடுக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட மனித குல நல்ல ஆத்மாக்கள், போலி சாமியார்கள், தாண்டவராயன், பூஜா - என காட்சிகள் மாறி மாறி அழுத்தமாக நகர்கிறது....

அடுத்தவர் நம்பிக்கைகளை காயப்படுத்தாமல், அதே சமயம் உண்மை நிலையை உரக்க சொல்லும் தகுதி ஒரு சிலருக்கே உண்டு... இதை ஏன் சொல்கிறேன் என்றால், நாத்திகம், ஆத்திகம் இரு வேறு பிரிவுகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.... இதில் சில ஆத்திகர்கள் நாத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....சில நாத்திகர்கள் ஆத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உதாரணத்துக்கு, அடுத்தவரின் மத நம்பிக்கையை குறை சொல்லி மட்டம் தட்டி, வெளியே பார்ப்பதற்கு அருமையான கலாச்சார படம் என்று சொல்லி படம் எடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்களும் (இந்த வார்த்தையை உபயோகிப்பது மிக நெருடலாக இருந்தாலும், இவர்களுக்கு இது சரியான பெயர் தான்) இங்கு உண்டு....

ஆத்திகமோ, நாத்திகமோ உன் வரையில் நீ சரியாக உறுதியாக இரு.... அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....

இவ்வளவுக்கும் நடுவில், பாலா ஒரு தரமான படத்தை கொடுத்து இருக்கிறார்....(அடுத்தவர் நம்பிக்கையை சிதைக்காமல்)

பாலா என்று இல்லை... இந்த படத்தில் அனைவரும் அவர் அவருக்கு உரிய வேலையை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.... அது இசை ஆகட்டும், நடித்தவர்கள் ஆகட்டும், எடிட்டிங், கேமரா, பாடல்கள்... எல்லாமே...

அப்புறம்... பாலா என்ற இயக்குனரின் மூலம் நமக்கு கிடைத்த நல்ல நடிகர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது....மேற்கூறிய நடிகர்கள், யாரும் அவர்களது முந்தைய படங்களில் அழுத்தமான நடிப்பை கொடுத்தது இல்லை.... அவர்களுக்கும் நடிக்க தெரியும் என்று நாம் அவர்களை, பாலா படங்களில் பார்த்த பின்பு தான் தெரிய வந்தது....அப்படி தங்களுக்கு நல்ல நடிப்பை சொல்லி கொடுத்து வெளிப்படுத்த உதவிய, இயக்குனர்களுக்கு நடிகர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்...பாலா போன்ற இயக்குனர் கையில் ரித்தீஷ் போன்ற மாஸ் ஹீரோ (?????) கிடைச்சா கூட சூர்யா அளவுக்கு நல்ல நடிகர் ஆக்கி விடுவார்.... (ஹி... ஹி....)

இந்த படத்திற்கும் ஏகப்பட்ட எதிர் மறையான விமர்சனங்கள், கருத்துக்கள்.... தன்னை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்த எடுக்கும் பிரயத்தனங்கள் தான் அவை.... அதை நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை....

மாஸ் ஹீரோ நடிச்சாலும் மேற்சொன்ன கூட்டம் குறை சொல்லும்...நல்ல படம் வந்தாலும் அது சொத்தை இது சொத்தை என சொல்லும் மேற்சொன்ன கூட்டம்....அப்போ எப்படி தான்டா எடுக்கணும்-னு நினைக்கிறீங்க-னு நாம் கேட்டால்...SMS-னு சொல்லி, புக் முழுவதும் அந்த பட விவரங்களை கொடுத்து, நம்மலை கொலையா கொன்னு எடுப்பாங்க...

ஒரு விமர்சனத்தை கூட தாங்கி கொள்ள முடிய வில்லையா???-னு எதிர் கேள்வி கேட்பதை விடுத்து...... ஆரோக்கியமான தமிழ் சினிமா வளர ஆதரவு கொடுங்கள்....பாராட்டி விழா நடத்தா விட்டாலும், வித்தியாசமான பார்வை என்ற வெற்று பேச்சுக்காக உங்களை நீங்களே மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தி கொள்ளாதீர்கள்...

மொத்தத்தில், நான் கடவுள் படம் எப்படி இருக்கு-னு உங்களுக்கே தெரியும்....நல்ல முயற்சி...

என் வரையில், சினிமா மனிதனுக்கு சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கும் அறிவை கொடுக்க போவது இல்லை... ஏனென்றால் "நாம் எல்லோரும் கடவுளே"...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

நமக்கு சொந்த ஊரு சிவகாசி.... படிச்சது வளர்ந்தது எல்லாமே அங்க தான்.... பள்ளி படிப்பில் தங்க மெடல் வாங்கி.. அம்மா, அப்பா கை-ல கொடுத்து விட்டு... மெப்கோ எனும் ஒழுக்கத்தின் வேடந்தாங்கலில் சிவில் இன்ஜினியரிங் படிக்க போனேன்.....

படிக்க போனமோ வந்தோமா-னு இல்லாம கவிதை, ஆட்டம், பாட்டம் எதுலேயும் குறை வைக்காம பிட் அடிச்சாச்சு பாஸ் ஆகுற அளவுக்கு, 2004-ல படிச்சு முடிச்சு வந்தேன்... (இதுல எங்க ஒழுக்கம் இருக்கு-னு கேக்குரீர்களா.... எனக்கும் கேக்குது.... கல்லூரி என்றால் எல்லாம் கலந்து தானே இருக்கணும்... என்ன சரி தானே?)....

படிச்சு முடிச்சு அஞ்சு மாசம் சும்மா வேண்டும் என்றே வேலைக்கு போகாம இருந்து... அப்புறம் தண்ட சோறு பட்டம் பெற்று... திருநெல்வேலி, சென்னை என எல்லா இடமும் வேலை பார்த்து ஒரு ரவுண்டு வந்து.... படிச்சு முடிச்ச பத்தாவது மாசத்தில் மாலத்தீவுகள் சென்றேன்.... எல்லாம் கடவுளின் & நல்லவர்களின் உபயம்.... அப்புறம் அங்க ஒன்றரை வருஷங்கள்.... மீண்டும் கடவுளின் உபயத்தால் இட மாற்றம்.... இம்முறை பஹ்ரைன்.... (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு... தமிழர் பண்பாட்டை மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் வெளி இடம் என்று ஆகி போச்சு)...இங்கு இரண்டு வருடங்கள் சொல்லாம கொள்ளாம ஓடி போய்டுச்சு.... எல்லாம் நல்ல படியா போகுது....

ஐயோ பிரசங்கி-க்கு அர்த்தம் சொல்ல போய்.... ம்ம்ம்ம்ம்... அருண் பிரகாஷ்.... அருண் என்றால் சூரியன்... பிரகாஷ் என்றால் பிரகாசமான... எல்லாரும் அவங்க அவங்க பெயரின் அர்த்தம், மூலம் எல்லாம் கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும்... இல்லையா? (பிரசங்கி எப்படி என்று கேட்டதற்கு பதில் சொல்ல இவ்வளவு நேரமா என்று நீங்கள்... சரி சரி சொல்லி விடுகிறேன்..... டேய் அருண்னு சீக்கிரம் சொல்லி தொலை...)

நெறைய கதை கட்டுரை படிக்கும் போது புனை பெயருடன் வரும்... நம்மளும் அப்படி வச்சா என்ன-னு ஒரு யோசனை-ல எங்க அப்பா-கிட்ட கேட்டேன்... புனை பெயர் வைத்து கொண்டால் நீங்க வச்ச பெயருக்கு பாதிப்பு வருமா-னு கேட்க அப்படி எல்லாம் இல்லை-னு அவங்க சொன்ன உடனே... நம்ம குணாதிசய சம்பந்தமா நம்மலே நமக்கு வச்சுக்கலாம்-னு முடிவு பண்ணி ஒரு வாரம் மண்டைய பிச்சுகிட்டு வச்சது தான் இந்த பிரசங்கி.....

அது என்ன குணாதிசயம்... வாத்தியார் பாடம் எடுக்கிறதுக்கு முன்னாடியே அந்த பாடத்தை வீட்ல வச்சு படிச்சு வந்து விடுவேன்.... சோ கேள்வி கேட்டால் எல்லாத்துக்கும் முன்னாடி பதில் சொல்லலாம்-ல.... இதுக்கு பெயர் அதிக பிரசங்கி....முந்திரி கொட்டை-னு சொல்லுவாங்க....

காலேஜ் போன அப்போ, அப்படி முன்னாடியே படிச்சு விட்டு போய் விடை சொல்லுவேன்.... மேடம் எல்லாரும் ஆச்சர்யமா பாக்க ஆரம்பிக்க, பசங்க பொரும ஆரம்பிக்க... இப்படியே போச்சு.... அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, சோம்பேறி தனம் கூடி கணக்கின் விடையை மட்டும் மனப்பாடம் பண்ணி வச்சுக்க பழகி கொண்டேன்...

கணக்கு எல்லா பாடங்களிலும் வரும்... மேடம் கணக்கு எழுதி போட்ட உடனே விடை சொல்லுவேன்... குட்-னு சொல்லுவாங்க... அவன் அவன் அந்த கணக்கை முடிக்க பதினைஞ்சு நிமிஷங்கள் ஆகிடும்.... அப்படியே நல்ல பிள்ளை பேரு வாங்கி, போன போது..

ஒரு நாள்..... மேடம் கணக்கை எழுதிய உடன் விடை சொன்னேன்....1.45 Tonne-னு... வெரி குட்-னு சொல்லி போர்டு-ல விடைய எழுதி போட்டுட்டாங்க... ஒரு இருபது நிமிஷம் ஆகி இருக்கும்... அவன் அவன் 189.34 Tonne-னு சொல்லுறான்... மேடம் புக்கை பாக்குறாங்க.... விடை 1.45 Tonne-னு இருக்கு.... மேடம் அப்புறம் அந்த கணக்கை போர்டு-ல பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.....அவங்க பண்ணி பார்த்தா 189.34 Tonne விடை வருது..... அருண் உனக்கு எப்படி சரியா வந்தது... புக் விடை உனக்கு மட்டும் சரியா எப்படி வருது... நீ பண்ணியதை காட்டு-னு சொன்ன உடன், 7G ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா மொக்கையா சிரிக்குற மாதிரி சிரிச்சு, என்னோட வெற்று பேப்பரை காமிச்சேன்.... கெட் அவுட்-னு உடனே கத்த ஆரம்பிக்க, பசங்க எல்லாம் கெக்கபெக்க-னு சிரிக்க என்னோட நேரம் சரி இல்லை-னு புலம்பிகிட்டு வெளிய போனேன்....

ம்ம்ம்ம்... சோ இப்படி இருக்கிறதால....பிரசங்கி தமிழ் வார்த்தையை நம்ம உபயோகிச்சுக்கலாம்... நமக்கு அதுக்கு தகுதி இருக்கு-னு நானே நினைச்சுகிட்டேன்!!!!.... பிரசங்கி... தமிழ் இலக்கணப்படி, எவன் ஒருவன் தன்னுடைய கருத்துக்களை, உலகுக்கு வெகு வேகமாக நேர்த்தியாக, சிறப்பாக, தெளிவாக சொல்கிறானோ அவனே பிரசங்கி..... பிரசங்கம்-னு சொல்லுவாங்களே... அது கூட இது தொடர்புடையது தான்....

என்ன எல்லாரும் எழுந்து தண்ணி குடிக்க போற மாதிரி தெரியுது.. ஐயோ இருங்க...இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... ம்ம்ம்ம்...சரி முடிச்சுக்கிறேன்....

நான் அதிக பிரசங்கி இல்லை.... அருண் பிரசங்கி தான்.... பிளாக்-னு ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு... ஆனா வேலை கொஞ்சம் அதிக படியா இருக்கிறதால அந்த பக்கம் ரொம்ப போக முடியல...
இருந்தாலும்அடிக்கடி பாருங்க.... உங்களுக்கு நேரம் இருக்கும் போது...

இவ்வளவு பொறுமையா படிச்சு கடைசி வரி வந்த எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல்...ம்ம்ம்ம்... என்ன சொல்ல... ஸ்பெஷல்....நீங்க எல்லாருமே ஸ்பெஷல் தான்..ஸ்பெஷல்-ஆ இருக்கிறவங்களுக்கு ஸ்பெஷல்-ஆ நான் என்ன கொடுக்க முடியும்????

விஷ் பண்ணிக்கிறேன்ன்ன்... டைம் ஆச்சு... பதில் மொழி போடுங்க.... நல்லது.... (டேய் அருண்னு உன் பிளேடு தாங்க முடியல-னு கண்டிப்பா பதில் வரும்.. போ... தூங்கு....).... சரி மீண்டும் நல்லது... பார்க்கலாம்....

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

"வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள"-னு காலங்காத்தலா என்னுடைய மொபைல் அலாரம் அடிச்சு ஊரை கூப்பிட, என்னவோ ஏதோ-னு பயந்து அடிச்சு பிடிச்சு உக்காந்தா, காதலர் தினம் ஸோ குளிக்குற வழிய பாரு-னு மண்டை-ல உரைக்க.... அதை கண்டுக்காம....

கொஞ்சம் காலேஜ் நாட்களை நினைச்சு பார்த்தா நல்லா இருக்குமோ-னு தோண,

அப்படியே பிளாஷ் பேக்.... 2004 பைனல் இயர்-னு நினைக்கிறேன்....

நமக்கு பிடிச்ச பொண்ணு... சாரி எனக்கு பிடிச்ச பொண்ணு... என்னை விட வயசுல சின்ன பொண்ணு தான்... ஜூனியர்...

பேரு ரொம்ப அவசியமோ.... ம்ம்ம்ம்.. பேரு இருக்கட்டும்...அழகா இருப்பா...... அழகா சிரிப்பா... அழகா பேசுவா... அழகா நடந்து வருவா...(டேய்... அருண்னு கவிதை பின்னி எடுக்கிற... எப்படிடா???... என்ன கொடுமை-னு எங்கோ இருந்தோ முணுமுணுப்பு வருதே... கண்டுக்காத... )

சினிமாக்களில் லவ் பண்ற பொண்ணை பார்த்தா கரண்ட் அடிச்சா மாதிரி இருக்கும்-னு சொல்லுவாங்க... நமக்கும் அப்படி தான்... ஆனா ஒரு சின்ன வித்தியாசம் அந்த பொண்ணு-னு இல்லை.. எந்த பொண்ணை பார்த்தாலும் அப்படி தான் தோணுச்சு.... சரி மேட்டர்-க்கு வாங்க...

அவ கூட எப்படி பேசலாம்????? நம்ம ஏரியா பசங்களே இப்படி தான்.... பொண்ணுங்களை பார்த்து பேசணும்னா கை கால் எல்லாம் நடுங்கி.... வேர்த்து கொட்டிடும்....

நமக்கு ஒரு பழக்கம்... ஒரு பொண்ணை பார்த்து விட்டா பேசுறதுக்கு முன்னாடியே அந்த பொண்ணு கூட கல்யாணம் ஆகி பொருட்காட்சி சேர்ந்து போற அளவுக்கு நினைப்பு போயிடும்....

சரி.... இப்படி பேசலாமா அப்படி பேசலாமா-னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன்...

காலேஜ் முடிஞ்சு அவ வீட்டுக்கு போற நேரம் பார்த்து... அவளை கூப்பிட்டு (உள்ளுக்குள்ள நடுக்கம் வேற).... பர்ஸ்ட் இயர் புக் இருந்தா கொஞ்சம் கொடு-னு கேட்டேன்.. எனக்கு தெரிஞ்ச பையனுக்கு கொடுக்கணும்-னு வேற சொன்னேன்... அவ ஏன் உங்ககிட்ட இல்லையா-னு நக்கலா கேக்க.... எனக்கு என்ன பேசணும்-னு தெரியல.... நான் தான் இந்த கேள்விக்கு தயாரா வரலையே.... ம்ம்ம்ம்...(அவளுக்கு எப்படி தெரியும்??? அரியர் வச்ச பாடத்துக்கு எல்லாம் அந்த புக்குகளை நார்நாராக கிழிச்சு பிட் அடிச்ச விஷயம்) ...எங்கோ தொலஞ்சு போச்சு-னு சமாளிச்சேன் ... சரி கொண்டு வர்றேன்-னு சொல்லிட்டு திரும்பி கூட பாக்காம போயிட்டா....

ஏதோ ஒரு பெரிய கம்பெனி நேர்முக தேர்வை வெற்றிகரமா முடிச்ச மாதிரி ஒரு பெருமிதம் வந்தது.... (ஓவரா இருக்கோ... பரவா இல்லை... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..)


நான் வீட்டுல இருந்து காலேஜ் போய் வந்தவன்.... இதுக்கு பேரு day scholar தானே... ஆனா காலேஜ் ஆரம்ப நாட்களில் யாராவது, நீ day scholar-nu கேட்டா, நான் free seat-னு சொல்லுவேன்... கேக்குறவன் தலைல அடிச்சுக்குவான்... அப்புறம் தான் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டது அவன் என்ன உண்மை-ல கேட்டான்னு....

இந்த ஒரு சின்ன விஷயம் தெரியல-னு சொல்லி எங்க அப்பாகிட்ட போயி, என்னை ஏன் தமிழ் மீடியம் படிக்க வச்சீங்க-னு சண்டை போடுவேன்.... எங்க அப்பா ஒண்ணும் சொல்லாம போய்டுவாங்க...

அப்புறம் தெரிஞ்சவங்க மூலமா அவளும் தமிழ் மீடியம்-னு கேள்விப்பட்ட போது ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் வந்தது பாருங்க.... அது எல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும்....

சரி புக்??? கொண்டு வந்தா.. கொடுத்தா.... வாங்கிகிட்டேன்... இதை சாக்கா வச்சு கொஞ்சம் பிட்டு போடலாம்-னு நினைச்சா, அவ கூட இன்னொரு சுமாரான பொண்ணு... போச்சுடா.... பேச முடியாம போச்சே... நம்ம விதி அவ்வளவு தான்னு நினைச்சு நொந்து கொண்டேன்...

பசங்க-கிட்ட சொன்ன போது விழுந்து விழுந்து சிரிச்சாங்க.... சிரிப்பு என்பது கல்லூரிக்கு உரித்தான ஒன்று ஆச்சே....

எல்லாத்துக்கும் மேல சாயந்திரம் பஸ்-ல வரும் போது... அவனவன் வாழ்கையின் லட்சியம் என்ன-னு சீனியர் ஒன் பை ஒன் கேக்குறாங்க... எல்லாவனும் பில் கேட்ஸ் மாதிரி வரணும்-னு சொல்றான்... (டேய்... எல்லாவனும் பில் கேட்ஸ் ஆனா அவருக்கு என்னடா மதிப்பு???-னு உள்ளுக்குள்ள சிரிச்சுகிட்டேன்...)... இப்போ என்னோட முறை... நான் சொல்றேன்.. அதோ நிக்குது பாருங்க... அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி எங்களுக்கு பொறக்க போற குழந்தையை இதே காலேஜ்-ல படிக்க வச்சு பாக்கணும்-னு சொன்னேன்... அவனவன் ஏதோ நான் உலக மகா காமெடி சொன்ன மாதிரி விழுந்து விழுந்து சிரிச்சாங்க... ஆனா அதை நானும் ரசிச்சேன்....


சரி புக் மேட்டர் சொதப்பல்... நெக்ஸ்ட்....

சரி சாக்லேட் வாங்கி கொடுப்போம்... என்ன-னு சொல்லி வாங்கி கொடுக்க...

பிறந்த நாள்-னு சொல்வதை தவிர வேறு வழி இல்லை...

ஆனா என் வரையில், பிறந்த நாள் கொண்டாடுவது பிடிக்காத ஒன்று.... நம்ம பிறந்த நாளை மத்தவங்க கொண்டாடனும்... நம்மலே ஏன் கொண்டாடனும்-னு எதிர் கேள்வி கேப்பேன்.....

சரி (நமக்கு தேவை என்றால் கொள்கைகளை மாற்றி கொள்வது தானே நவீன கால மனிதத்துவம்) பிறந்த நாள் என்று சொல்லி சாக்லேட் கொடுப்பது தான் சால சிறந்தது-னு ரெடியானேன்...

என்ன சாக்லேட் கொடுக்க-னு சுவத்துல முட்டி மோதி யோசிச்சு... படிக்கிறதுல இப்படி யோசிச்சு இருந்தா நான் வேற மாதிரி மாறி இருப்பேனோ???...

டைரி மில்க் சாக்லேட் 4 வாங்கி கொண்டேன்... காசு???.. அப்பா... டிசிப்ளின் கமிட்டி வச்சு இருக்காங்க.. 50 ரூபா கட்டணும்... கொடுங்க.... உண்மை காரணம் சொல்ல நான் என்ன அரிச்சந்திரன்-க்கு ஒண்ணு விட்ட சித்தப்பா பையனா???...

வாங்கி ஆச்சு... கொடுக்கணும்... பேசணும்... கண்ணாடி முன்னாடி நின்னு ரிகர்சல் பார்த்து கொண்டேன்.... இருந்தாலும் பட படப்பு அடங்கல... குளிச்சு முடிச்சு, இருக்கிறதுல ரொம்ப நல்லா இருந்தா ப்ளூ கலர் கோடு போட்ட சட்டைய இன் பண்ணி கொண்டேன்... பவுடரை வழக்கத்துக்கு மாறாக அதிகம் பூசி கொண்டேன்... பீரோவின் உள் இருந்து சென்ட் போட்டு கொண்டேன்... முடியை நெற்றி தெரியாத வண்ணம் இழுத்து முன் புறம் அமுக்கி கொண்டேன்....

செருப்பை இரு முறை பாலிஷ் போட்டேன்... குனிஞ்சு பார்த்தா செருப்பும் நல்லா தெரியணும்-ல...

காற்றுக்கு முன் முடி பறந்து போகா வண்ணம் ஒரு கைய வச்சு பிடிச்சு கொண்டே இன்னொரு கையால் சைக்கிள் ஓட்டினேன்.... வரும் வழியில்... தெரு நண்பன்... என்னடா அருண் பிறந்த நாளா-னு கேட்ட உடன், எஸ் நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா தான் இருக்கிறமோ-னு எய்யாடி-னு வடிவேலு புலம்புறதை போல புலம்பி காலேஜ் வந்து சேர்ந்தேன்....


காலேஜ் பஸ்-ல இருந்து இறங்கிய உடன், நடந்து போறவளை கை தட்டி அழைத்து எனக்கு பிறந்த நாள்- என சொல்லி ஒரு வழியா சாக்லேட் எல்லாத்தையும் அவகிட்ட கொடுத்தேன்.... அவ பதிலுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வாங்கி கொண்டாள்... என்னோட போதாத நேரம் கிளாஸ் காரன் வேற இதை பார்த்துட்டான்.... உடனே பசங்க எல்லாம்.. எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்காத நாயே... அவளுக்கு மட்டும் அப்படி என்ன???-னு திட்டு மழை.... (காலேஜ் லைப்-ல இது எல்லாம் சகஜமப்பா...)...


அடுத்த வாரம், என்ன பேச...எப்படி பேச-னு தயக்கம்....

அவன் அவன் ஒரே ஒரு வாரத்துல பேசி கரெக்ட் பண்றாங்க.... நமக்கு என்னடா பேசவே இப்படி உதறல் எடுக்குது-னு நினைச்சுகிட்டேன்....

பிள்ளையார் சாமி-னா நமக்கு ரொம்ப இஷ்டம்... அவருகிட்ட சொல்லி பாக்கலாம்-னு அடிக்கடி கோவிலுக்கு போவேன்... சொல்லுவேன்... அவரும் என்கிட்டே முறை இட்ட 18725466879245 நபர் நீ... காலம் வரும் மகனே என்று சொன்ன மாதிரி இருந்ததால் கோவில் பக்கம் போவதையே தவிர்த்தேன்....

சாப்பிட பிடிக்கலை... விளையாட பிடிக்கலை... என்னடா லைப் இது-னு தோணும்....

ஒரு வழியா கடைசியா ஐடியா கிடைச்சது... எங்க தாத்தாவுக்கு சாமி கும்பிட்டாங்க... நெறைய பழங்கள் மிஞ்சி போச்சு..... அதை எல்லாம் எடுத்து கொண்டு... மறு நாளே அவகிட்ட போய் கொடுத்தேன்... சந்தோசமா வாங்கிகிட்டு, அடுத்த வாரம் என்ன கொண்டு வருவீங்க-னு சிரிச்சுகிட்டு கேட்டா... கொஞ்ச நேரம் பேசி இருப்போம்... அவ சப்பாணி தோழி வந்து விட்டா... சரி பார்க்கலாம்-னு சொல்லிட்டு போயிட்டா..

என்னது இது.... இப்படியே போச்சுனா வேற எவனாவது குறுக்கால புகுந்து விடுவானோ-னு பயம் வேற....

கடைசி-ல என்ன தான் ஆச்சு.... காலேஜ் கடைசி நாளில்.... சரி அண்ணா, பத்திரமா போயிட்டு வாங்க-னு அவளே வந்து சொன்னா... நான் அதுக்கு, காது சரியா கேக்கல... கொஞ்சம் இந்த பக்கம் வந்து சொல்லு-னு சொன்னேன்... உடனே சிரிச்சுகிட்டு பத்திரமா போயிட்டு வாங்க-னு சொன்னேன்-னு சொன்னா...
அண்ணன்... எவண்டா எந்த வார்த்தையை கண்டுபிடிச்சவன்-னு கண்டுபிடிச்சு, அவனை நாலு அறை விடணும்-னு தோணுச்சு...

சரி நமக்கு-னு ஒண்ணு செட் ஆகும்.... பிள்ளையார் சொன்ன மாதிரி வெயிட் பண்ணலாம்-னு நினைச்சுக்கிட்டேன்... இருந்தாலும், ம்ம்ம்ம்... என்ன எழவோ... நல்லா இருந்தா சரி-னு சோகமா வாழ்த்தி விட்டு வந்துட்டேன்....


அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.... அவளுக்கு ஏற்கனவே ஒரு பையன் கூட லவ்-னு....
(என்ன கொடுமை சார் இது....)

சுமாரான பொண்ணுங்களை கூட நம்ம பசங்க உஷார் பண்றாங்க... ஸோ காலேஜ் எங்க போனாலும் சரி எல்லா இடமும் புக் ஆகி இருக்கிற மாதிரி தோணுச்சு...

ஸ்கூல் படிக்குற பத்தாவது, பன்னிரண்டாவது பொண்ணுங்களுக்கு நூல் விட்டா என்ன-னு தோணி.... நான் ஸ்கூல் பக்கம் சுத்தியது ஒரு கதை....

சரி..... போதும் சுய புராணம்....

இன்னைக்கு காதலர் தினம்.... சும்மா இதுக்கு எல்லாம் ஒரு நாளா-னு சொல்லி திட்டி, மொக்கைய போடாம காதலில் இருக்கிறவங்க இன்னும் காதலிங்க... காதல் ஜோடி இல்லாதவங்க உங்க காதலியை தேடுங்க... உண்மையா இருங்க.... உங்களுக்கு பிடிச்ச பொண்ணை பார்த்து அவள் கண்கள் பார்த்து பேசுங்க.... நீங்க அவங்க மேல பாசமா இருக்கீங்க-னு தெரிஞ்சா போதும்.... உசுரையும் கொடுப்பாங்க....நம்ம ஊரு பொண்ணுங்க....

அப்படி பொண்ணு கிடைச்சு போச்சுனா சொல்லுங்க.... நானும் அப்படி கிடைச்சா சொல்றேன்...

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் வாழ்க்கை... அந்த வாழ்க்கை கணவன் மனைவி என்ற உறவின் மூலமாக இருந்தாலும், காதலன் காதலி என்ற அடிப்படையில் தான் மேற் சொன்ன உறவு பலம் ஆகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்...

மீண்டும்... காதலர் தின வாழ்த்துக்கள்....

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

Ultricies Eget

என்னைப் பற்றி

My Photo
அருண் பிரசங்கி
Bahrain
எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் அருள் உள்ளவன். மின்னஞ்சல் arunprasangi@yahoo.co.in
View my complete profile
Subscribe to Feed